×

புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிப்போருக்கு 15 நாளில் 'ஸ்மார்ட் கார்டு'வழங்கப்படும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

சென்னை: புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிப்போருக்கு 15 நாளில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். பெரிய நகரங்களின் நெருக்கடியை குறைக்க புறநகர் பகுதிகளில் துணை நகரங்கள் உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்.மதுரையில் ரூ.70 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் அமைக்கப்படும். சென்னை மாநகராட்சி கட்டமைப்பை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் வகையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்.மதுரை, திருச்சி, சேலம், நெல்லையில் பெருந்திரள் விரைவு போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.


Tags : Governor Panwaral , Smart card issued to new family card applicants within 15 days: Governor Banwarilal Purohit
× RELATED ஜூன் 2ம் வாரத்தில் சட்டப்பேரவை கூட்டம்...