சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு சபாநாயகர் அப்பாவு, செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். எளிமையான வாழ்க்கையை வாழுங்கள் இது ஊழலை அகற்றிவிடும் இது எனது செய்தி என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையை தொடங்கினார். மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.