- கேடரினா
- எமிலியா ஓப்பன்
- பர்மா எமிலியா ஓபன்
- பார்மா, இத்தாலி
- எமிலியா ஓபன் டென்னிஸ் அரையிறுதி
- கேட்டரினா
- தின மலர்
பார்மா எமிலியா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் செக் வீராங்கனை கேதெரினா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இத்தாலியின் பார்மா நகரில் எமிலியா ரோமாக்னா ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நடக்கிறது. இதன் ஒற்றையர் காலிறுதி ேபாட்டி ஒன்றில் செக் குடியரசு வீராங்கனை கேதெரினா சினியகோவா(68வது ரேங்க்), பிரான்ஸ் வீராங்கனை கரோலினா கார்சியா(53வது ரேங்க்) ஆகியோர் மோதினர். டைபிரேக்கர் வரை நீண்ட முதல் செட்டை கேதெரினா 7-5 என்ற புள்ளி கணக்கில் போராடி கைப்பற்றினார். அதன் பிறகு 2வது செட்டை 6-1 என்ற கணக்கில் கேதெரினா எளிதில் வசப்படுத்தினார். சுமார் ஒருமணி 35நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தை 2-0 என நேர் செட்களில் வென்ற கேதெரினா அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கேதெரினா, முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சை(8வது ரேங்க்) வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. …
The post எமிலியா ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் கேதெரினா appeared first on Dinakaran.