×

ரூ.10 லட்சம் தங்கம் கடத்தியவர் கைது

சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு வந்த சிறப்பு விமானத்தில் ரூ.10 லட்சம்  தங்கம் கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார். துபாயிலிருந்து நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு ஒரு சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, கடலூரை சேர்ந்த அருள்ராஜ் சுப்பிரமணியம் (41) என்பவர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி, அவரது சூட்கேசை சோதனையிட்டபோது, ஜூஸ் பிழியும் இயந்திரம் ஒன்று இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது, ரூ.10 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்கக் கட்டிகள் இருந்தது. அதை பறிமுதல் செய்து, அருள்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Gold smuggler arrested for Rs 10 lakh
× RELATED சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் போக்சோவில் 17 வயது சிறுவன் கைது