சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் சட்டத்தின் குறைபாடுகளை ஆராய நிபுணர்குழு அமைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போதைய சூழலில் இது முக்கியமான வழக்கு என்பதால் மனுதாரர் கூடுதல் தகவல்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 32 மாவட்டங்களில் உள்ளூர் புகார் குழு அமைக்கப்பட்டுள்ள அவை முறையாக செயல்படாமல் உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.