×

'அதிமுகவில் சசிகலா அடிப்படை உறுப்பினர் கூட இல்லை'!: பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் அதிமுகவை கைப்பற்ற சதி...முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு..!!

சென்னை: அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் அதிமுகவை கைப்பற்ற சதி செய்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அவர் எவ்வாறு அதிமுகவை சொந்தம் கொண்டாட முடியும். 


எவ்வாறு அதிமுக உறுப்பினர்களிடம் பேச முடியும் என்று குறிப்பிட்டார். அதிமுகவைப் பொறுத்தவரை சசிகலா இல்லாமல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலை எப்போதும் தொடரும். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தாம் கட்சியில் இருந்து விலகி கொள்வதாக சசிகலா அறிவித்தார். அதன் பிறகு சட்டமன்ற தேர்தல் நடைபெற்று திமுகவுக்கும் - அதிமுகவுக்கும் இடையேயான வாக்குவித்யாசத்தில் தற்போது வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக விளங்கி வருகிறது. 


சசிகலா நினைத்ததென்னவோ தேர்தலுக்கு பிறகு தோல்வி இருக்கும் என கணித்தார். ஆனால் எங்களை பொறுத்தவரையில் இது வெற்றிகரமான தோல்வி தான். இதனை சசிகலாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே கட்சியில் குழப்பத்தை உருவாக்குவதற்காக இதுபோன்ற ஆடியோ அரசியலை அவர் கையில் எடுத்துள்ளார். அதிமுகவில் சசிகலா அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் அதிமுகவை கைப்பற்ற சதி செய்து வருகிறார் என்று குறிப்பிட்டார்.



Tags : Sasikala ,Former ,Jaykumar , AIADMK, Sasikala, base member, former minister Jayakumar
× RELATED சசிகலா காலில் விழுந்துதான் அனைவரும்...