சென்னை: கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்ற கோரிய வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு பதில் தர உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மனுதார் கோரிக்கை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஓப்புதலுக்காக காத்திருப்பதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 வாரத்திற்குள் மனுதாரர் கோரிக்கை குறித்த திட்ட செயல்முறை தொடங்கப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது.