சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் நாளை காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்கிறார். கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்தும் ஆட்சியர்களிடம் முதல்வர் கேட்டறிவார் எனவும் கூறப்படுகிறது.