×

இன்னும் எத்தனை வழிகளில் இந்தியாவை பாஜக கொள்ளையடிக்கப் போகிறது ? : ராகுல் காந்தி கடும் தாக்கு!!

டெல்லி : மொத்த உள்நாட்டு உற்பத்தி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட விவகாரங்களில் ஒன்றிய அரசை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியாவில், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது. மும்பை உள்ளிட்ட நகரங்களில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எரிபொருள் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரக் கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. தமிழகம், மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களில், ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று, மத்திய பாஜக. அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில், சமூக வலைதளமான டுவிட்டரில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:மொத்த உள்நாட்டு உற்பத்தி நொறுங்கியது; வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது; எரிபொருள் விலை விண்ணை முட்டியுள்ளது. இன்னும் எத்தனை வழிகளில் இந்தியாவை பாஜக., கொள்ளையடிக்கப் போகிறது ? இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags : India , உள்நாட்டு உற்பத்தி
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!