×

21ம் தேதி பருவத்தேர்வுகள் தொடங்கும்: சென்னை பல்கலை அறிவிப்பு

சென்னை: இளங்கலை, முதுகலை மற்றும் தொழில்முறை படிப்புகளுக்கான ஏப்ரல் 2021 தியரி தேர்வுகள் ஊரடங்கு காரணமாக ஒரு வாரம் தாமதமாகும் என்று சென்னை பல்கலைக்கழகம் நேற்று அறிவித்தது.  அனைத்து பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் ஜூன் 15 ஆம் தேதி தொடங்கும் என்று தமிழக உயர்கல்வித் துறை அறிவித்திருந்தது.  இந்த நிலையில் ஏப்ரல் மாத பருவத்தேர்வுகள் வருகிற 21ம் தேதி முதல் தொடங்கும். ‘‘ஊரடங்கு காரணமாக, வினாத்தாள்களைத் தயாரிப்பது உள்ளிட்ட தேர்வுக்கான ஏற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, சற்று தாமதத்திற்குப் பிறகு தேர்வுகள் தொடங்கும்” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக பதிவாளர் மதிவாணன் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தேர்வுகளுக்கான அட்டவணை ஜூன் 14 ஆம் தேதி பல்கலைக்கழக வலைத்தளமான www.unom.ac.in இல் பதிவேற்றப்படும். ஹால் டிக்கெட்டுகள் ஜூன் 15 அன்று பதிவேற்றப்படும். மேலும் தேர்வுகள் மூன்று மணி நேரம் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : University of Chennai , Season exams start on the 21st: Chennai University announcement
× RELATED அரசு பணி, பதவி உயர்வில் திறந்தநிலை...