×

2 போலீஸ்காரர்களை கொன்ற 2 ரவுடிகள் சுட்டுக் கொலை: பஞ்சாப் போலீசார் கொல்கத்தாவில் அதிரடி

கொல்கத்தா: பஞ்சாப்பில் 2 போலீஸ்காரர்களை கொன்ற 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த மே 15ம் தேதி, பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம் ஜாக்ரானில்  உள்ள வேளாண் சந்தையில் ஏற்பட்ட மோதலில் போலீஸ் எஸ்ஐ தல்விந்தர் சிங்  மற்றும் பகவான் சிங் ஆகியோர் மர்ம கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இவ்விவகாரம் தொடர்பாக, தனிப்படை போலீசார் குற்றவாளிகளை கைது செய்து  வருகின்றனர்.  தொடர்ந்து மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள்  ஜஸ்பிரீத் சிங் மற்றும் ஜெய்பால் சிங் ஆகியோர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து, பஞ்சாப் தனிப்படை போலீசார் மேற்குவங்க காவல்துறையுடன் இணைந்து கொல்கத்தாவில் கடந்த 2 நாட்களாக முகாமிட்டு குற்றவாளிகளை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு குறிப்பிட்ட பகுதியில் இருந்த குற்றவாளிகள் ஜஸ்பிரீத் சிங், ஜெய்பால் சிங் ஆகியோரை போலீசார் சுற்றிவளைத்தனர். அவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால், அவர்களை நோக்கி போலீசார் சுட்டதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதுகுறித்து  பஞ்சாப் டிஜிபி டிங்கர் குப்தா கூறுகையில், ‘கொல்கத்தா காவல்துறை உதவியுடன், குற்றவாளிகள் ஜஸ்பிரீத் சிங், ஜெய்பால் சிங் ஆகியோரை பஞ்சாப் போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்’ என்றார்.


Tags : Punjab police ,Kolkata , 2 rowdies shot dead in Punjab
× RELATED கொல்கத்தா லக்னோ மோதல்: 4வது வெற்றி யாருக்கு?