×

சலூன் கடைகளை திறக்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் மத்திய சங்கம் கோரிக்கை

பெரம்பூர்: தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் மத்திய சங்கம் சார்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதனால்  பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. இதுபோல் முடிதிருத்தும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 26ம்தேதி முதல் 40 நாட்களாக கடைகளை திறக்க முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம்.  

எனவே, உரிய பாதுகாப்பு விதிமுறையுடன் ஒருவரை மட்டும் அனுமதித்து சலூன் கடைகளை திறக்க அரசு ஆவணம் செய்ய வேண்டும். மேலும், முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியாக ₹15 ஆயிரம் வழங்கவேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளனர்.

Tags : Tamil Nadu Barbers' Union , Saloon shops should be opened: Tamil Nadu Barbers' Union demands for first
× RELATED மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே...