×

தர்மபுரி அருகே பணம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் கோவையில் மீட்பு

கோவை: தர்மபுரி அருகே வெண்ணாம்பட்டி பகுதிய சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜசேகர் என்பவரது 7 வயது மகன் ஹரிஷ் என்ற சிறுவன் மீட்கப்பட்டுள்ளான். ராஜசேகரிடம் அவரது கோவையை சேர்ந்த இன்ஸ்டாகிராம் நண்பரான சரவணனகுமார்  பழைய கார் வாங்கதர சொல்லி  ஒரு மாதத்திற்கு முன்பு 80ஆயிரம் ரூபாய் குடுத்த்தாக கூறப்படுகிறது. ஆனால் கார் வாங்கி தராமலும் பணத்தை திருப்பி தராமலும் ராஜசேகர் ஏமாற்றியதால் ஆத்திரமடைந்த சரவணகுமார், அவரது மகனை கடத்தி சென்றுள்ளார்.

பணத்தை திருப்பித்தர ஒருநாள் கெடுவிதித்த நிலையில் போலீசார் சாதுரியமாக பேசி சரவணகுமாரை கைது செய்தனர். மேலும் அவர் கடத்தி வைத்திருந்த சிறுவனையும் போலீசார் பத்திரமாக மீட்டனர். பணத்தை திருப்பி கொடுக்காததாலேயே சிறுவனை கடத்தியதாக கைது செய்யப்பட்ட சரவணகுமார் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். கோவையில் மீட்கப்பட்ட சிறுவனை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். புகார் அளித்து ஒருநாள் முடிவதற்குள்ளாகவே கடத்தி செல்லப்பட்ட சிறுவனை போலீசார் மீட்டுள்ளார்.


Tags : Grotto , Dharmapuri, money, kidnapping, boy
× RELATED தர்மபுரியில் அதிகாலையில் பயங்கரம்...