பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர் கோஷியாமி தமாரா சித்தோல் (37). இவருக்கு ஏற்கனவே இரட்டை குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், அவர் மீண்டும் கர்ப்பமானார். கடந்த 7ம் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பிரிட்டோரியா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் 10 குழந்தைகள் பிறந்தன. 7 ஆண் குழந்தைகளும், 3 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன. 10 குழந்தைகள் பிறந்திருப்பதை கண்டு கோஷியாமியே திகைத்துள்ளார். ஏனென்றால், மருத்துவ பரிசோதனைகளின் போது 6 குழந்தைகள் மட்டுமே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். அதை கேட்டே மிரண்டு போயிருந்த அவர், 10 குழந்தைகள் பிறந்துள்ளதை பார்த்து திகைத்துள்ளார். இவர் 10 குழந்தைகள் பெற்றது கின்னஸ் சாதனையாகி உள்ளது. இதற்கு முன் ஹலிமா சிஸ்சி என்பவர் கடந்த மே மாதம் மொராக்கோ மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளை பெற்றெடுத்தது உலக சாதனையாக கருப்படுகிறது.