×

ஜூன் 14-ம் தேதி அதிமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம்; சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ஜூன் 14-ம் தேதி அதிமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அதிமுக அலுவலகத்தில் நடைபெறும் என முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். வருகிற 14ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்த போலீஸ் அனுமதிகோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ஆளுங்கட்சியின் குறைகளை மக்களிடம் எடுத்துச்சொல்வது அதிமுக தொண்டர்களின் எண்ணமாக இருக்க வேண்டும் என்று கூறினார். சசிகலா வெளியிட்ட ஆடியோ குறித்து கேட்டபோது, சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


இந்நிலை தொடரும் என்று கூறினார். மேலும் அதிமுக பொதுச் செயலாளரை புதிதாக தேர்வுசெய்ய மாட்டோம் என்றும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் கட்சியை வழி நடத்துவார்கள் என்றும் தெரிவித்தார். அதிமுகவில் எந்தவித சலசலப்பும் இல்லை. ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக அதிமுக செயல்படும் என கூறினார். ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரையும் மக்கள் ஏற்றுக் கொண்டதால்தான் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் 3 சதவிகிதம்தான் வாக்கு வித்தியாசம் என்று கூறினார். 



Tags : AIADMK ,Sasikala ,Jayakumar , June 14, AIADMK MLAs meeting, Jayakumar interview
× RELATED சசிகலா ஒரு வெற்று பேப்பர்: ஜெயக்குமார் கிண்டல்