பழனி: பழனி காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபார மளிகை கடைகளை திறக்க நகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மொத்த வியாபார மளிகை கடைகளை திறக்க அனுமதிக்காத நிலையில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வியாபாரிகள் போராட்டத்தை அடுத்து சமூக இடைவெளியை பின்பற்றி வியாபாரம் செய்ய நகராட்சி நிர்வாகிகள் அறிவுறுத்தி உள்ளனர்.