×

முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் பாலியல் வழக்கு: உதவியாளர் மற்றும் பாதுகாவலர் விசாரணைக்காக மகளிர் காவல் நிலையத்தில் ஆஜர்

சென்னை: முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் மணிகண்டன் உதவியாளர் மற்றும் பாதுகாவலர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர். விசாரணைக்காக நேற்று ஆஜராகாத இரண்டு பேரும் இன்று விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது திரைப்பட நடிகை சாந்தினி தமக்கு பாலியல் தொல்லை கொடுத்து திருமணம் செய்வதாக கூறி ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் புகார் அளித்திருந்தார். 


நடிகை சாந்தினி அளித்த புகாரின் பெயரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என உயர்நீதிமன்றத்தில் நடிகை சாந்தினி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நடிகை தாக்கல் செய்த மனு நீதி மன்றத்திற்கு வராததால் வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்திருந்தனர். 


மணிகண்டனின் முன்னாள் பாதுகாவலர் மற்றும் உதவியாளருக்கு  விசாரணைக்காக ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனின் முன்னாள் பாதுகாவலர் மற்றும் உதவியாளர் இருவரும் சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார்.



Tags : AIADMK ,minister ,Azhar , ADMK Minister, Sex Case, Assistant and Defender, Azhar
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...