×

போலி பாஸ்போர்ட் மூலம் துபாயில் 20 ஆண்டு பணிபுரிந்தவர் கைது

சென்னை: போலி பாஸ்போர்ட் மூலம் 20 ஆண்டுகளாக துபாயில் பணியாற்றியவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் துபாயிலிருந்து கடந்த 6ம் தேதி வந்த விமானத்தில் திருவாடானை திருப்பாளைக்குடி பஷீர் அலி (41) என்பவர் இருந்தார். அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது போலி என தெரியவந்தது. அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்டவர் பட்டுக்கோட்டை சாத்தங்காடு சிவக்குமார் (41) என்பதும் அவர் பஷீர்அலி என்ற பெயரில் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து, பாஸ்போர்ட் பெற்று துபாய் சென்று கடந்த 20 வருடங்களாக வேலை செய்தது  தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர்.

Tags : Dubai , A man who worked in Dubai for 20 years has been arrested with a fake passport
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...