சென்னை: சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் செலுத்த அவகாசம் வழங்க ரிசர்வ் வங்கியை வலியுறுத்த 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார். ரூ.5 கோடி வரையிலான நிலுவையில் உள்ள அனைத்து சிறு கடனாளர்களுக்கும் கடனை திருப்பி செலுத்த 6 மாதமங்கள் அவகாசம் வழங்க வேண்டும். சிறு கடனாளர்களுக்கு 6 மாதம் அவகாசம் தர வேண்டும் என்று ஒன்றிய நிதி அமைச்சரை வலியுறுத்த 12 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.