×

சுற்றுச்சூழலை கெடுக்கும் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த கூடாது: வைகோ கோரிக்கை

தேனி: தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் சுற்றுச்சூழலை கெடுக்கும் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இந்த திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீட்டு மனு விசாரணையில் இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் காட்டு உயிர்கள் பாதுகாப்பு வாரியத்தின் தடையின்மை சான்று கோரி தமிழக வனத்துறையிடம் டாடா இன்ஸ்டியூட் ஆஃப் ரீசர்ச் சமர்பித்திருக்கும் விண்ணப்பத்தை அரசு ஏற்க கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கின் விசாரணையில் தமிழக அரசு தெளிவாக எடுத்துரைத்து ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் சான்றுக்கு தடை விதிக்கும் தீர்ப்பை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த திட்டத்திற்காக தமிழக அரசு வழங்கியுள்ள நிலத்தையும் திரும்ப பெற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.



Tags : Viko , vaiko
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து சென்னை அண்ணா...