×

புனேவில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் தீ விபத்து; 15 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழப்பு

புனே: புனேவில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்து உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள பிரன்கட் பகுதியில் எஸ்.வி.எஸ். அக்வா டெக்னாலஜிஸ் என்ற ரசாயன ஆலையில் குளோரின் டை ஆக்சைடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த ஆலையில் அதிக அளவில் பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், கம்பெனியில் நேற்று பிற்பகல் திடீரென  ஒரு மெஷின்  வெடித்து தீப்பிடித்துக்கொண்டது. இதில் ஊழியர்கள் அனைவரும் தீயில் சிக்கிக்கொண்டனர். தீ விபத்து குறித்து கேள்விப்பட்டதும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். 7 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும்  போராட்டத்தில் ஈடுபட்டனர். 


தீயணைப்பு துறையினர் உள்ளே சென்று உள்ளே சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் தீ ஆலையின் முழு பகுதியிலும் பரவ தொடங்கியது. இந்நிலையில் தீயில் சிக்கிய 18 பேரின் உடல்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. அதில் 15 பெண்கள் என கூறப்படுகிறது. சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சி தலைவர் ராஜேஷ் தேஷ்முக் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒருவர் மட்டும் காயத்துடன் தப்பினார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் வழங்க துணை முதல்வர் அஜித் பவார் உத்தரவிட்டுள்ளார். 



Tags : Pune , Pune, chemical plant, fire accident
× RELATED அரசு பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள்...