×

கொரோனா தடுப்பு பணிகளில் பிரதமர் மோடி ஒரே ஒரு தவறை மட்டும் காலம் தாழ்ந்து திருத்தி கொண்டுள்ளார்!: காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம்..!!

டெல்லி: கொரோனா தடுப்பு பணிகளில் பிரதமர் மோடி ஒரே ஒரு தவறை மட்டும் காலம் தாழ்ந்து திருத்தி கொண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். மாநிலங்களுக்கான தடுப்பூசியை இனி ஒன்றிய அரசே கொள்முதல் செய்து இலவசமாக வழங்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கூறினார். இதுகுறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்க்கு பேட்டி அளித்த ப.சிதம்பரம், பிரதமர் தமது தவறுகளை எதிர்க்கட்சிகள் மீது சுமத்துவதாக குற்றம் சாட்டினார். இலவச தடுப்பூசி, ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் ஓராண்டாக முன்வைத்து வருவதாக ப.சிதம்பரம் குறிப்பிட்டார். 


தடுப்பூசி கொள்கையில் தற்போது ஒரே ஒரு தவறை மட்டும் மோடி அரசு திருத்தி கொண்டுள்ளதாக கூறிய ப.சிதம்பரம், தாமதமான முடிவால் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க இன்னும் பல மாதங்கள் ஆகும் என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது, பிரதமர் மோடி தற்போது ஒரு தவறை திருத்திக்கொண்டுள்ளார். இந்த திட்டம் செயற்பாட்டிற்கு வந்ததும் தடுப்பூசி செலுத்த எத்தனை மாதங்களாகும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 


மோடி அரசின் தொடர்ச்சியான தவறுகளால் தடுப்பூசி திட்டம் பாதிக்கப்பட்டது. தற்போது ஒரே ஒரு தவறை திருத்தி கொண்டுள்ளனர். ஆனாலும் இன்னும் நிறைய குறைகள் உள்ளன என்று தெரிவித்தார்.  எதிர்க்கட்சி தலைவர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் இரண்டை மட்டுமே ஒன்றிய அரசு ஏற்று கொண்டுள்ளதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார். தடுப்பூசி கொள்கையில் செய்துள்ள மாற்றத்தை வரவேற்பதாகவும், ஆனால் பிரதமரின் தவறுகளுக்கு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட கூடாது என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 



Tags : Modi ,P. Chidambaram , Corona prevention work, Prime Minister Modi, P. Chidambaram
× RELATED பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை: ப.சிதம்பரம் பேட்டி