×

3 ஆண்டுகளுக்கு பின் புகார்!: மயிலாடுதுறையில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பள்ளியில் படித்தபோது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், அரசு உதவி பெரும் டி.பி.டி.ஆர். தேசிய மேல்நிலை பள்ளியில் கடந்த 2010ம் ஆண்டு 6ம் வகுப்பு முதல் 2018ம் ஆண்டு 12ம் வகுப்பு வரை படித்துள்ளார். அப்போது விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவி, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் அண்ணாதுரையிடம் பயிற்சி பெற்று வந்துள்ளார்.  அச்சமயம் அண்ணாதுரை பலமுறை இரட்டை அர்த்தத்தில் பேசுவது, உடல் ரீதியாக சீண்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். 


இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு கல்வி உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு மாணவியை தனது வீட்டிற்கு அழைத்த ஆசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அந்த மாணவி புகார் அளித்தார். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் அண்ணாதுரையை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து தங்களுக்கும் பாலியல் தொந்தரவு அளித்ததாக 2008, 2011ம் ஆண்டு காலகட்டத்தில் படித்த மாணவி ஒருவரும், 2010 முதல் 2018ம் ஆண்டு காலகட்டத்தில் படித்த ஒரு மாணவியும் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அவர்களுடைய சாட்சிகளையும் கொண்டு உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரையை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.  



Tags : Mayiladuthurai , Mayiladuthurai, student, sexual harassment, teacher, arrested
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...