×

தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறையில் பணியாற்றும் 8 மேலாண் இயக்குநர்கள் பணியிடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறையில் பணியாற்றி வரும்  8 மேலாண் இயக்குநர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து துறையின் கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கோயம்புத்தூர் அரசு போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநராக பணியாற்றி வரும் அன்பு ஆபிராகம் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநராகவும், போக்குவரத்து துறையின் தலைவர் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் ஜோசப் டயப் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநராகவும்,  மதுரை அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநராக பணியாற்றி வரும் முருகேசன் சென்னை ஐஆர்டியின் கூடுதல் இயக்குநராகவும் மற்றும் பல்லவன் போக்குவரத்து கன்சல்டன்சி சர்வீஸ் மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்படுகிறார்.

மேலும் நெல்லை போக்குவரத்து கழக மேலாண் இயக்குநராக உள்ள திருவம்பலம் பிள்ளை போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியாகவும், ஊட்டி போக்குவரத்து கழக பொது மேலாளராக பணியாற்றி வரும் ஆறுமுகம் கோவை அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை அரசு போக்குவரத்து கழகத்தின் பொதுமேலாளராக பணியாற்றி வரும் ராஜேஸ்வரன் நெல்லை போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநராகவும், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தின் பொதுமேலாளராக பணியாற்றிவரும் ராஜ்மோகன் மதுரை அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநராகவும் மாற்றப்பட்டுள்ளார். சேலம் அரசு போக்குவரத்து கழகத்தின் பொது மேலாளராக பணியாற்றி வரும் மோகன் சேலம் போக்குவரத்து கழகத்தின் மோலண் இயக்குநராக மாற்றப்படுகிறார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Directors ,Tamil Nadu , 8 Managing Directors working in the transport sector across Tamil Nadu Transfer: Government of Tamil Nadu Order
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...