×

கருப்பு பூஞ்சைக்கான மருந்துகளை வாங்க முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.25 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவு

சென்னை: கருப்பு பூஞ்சைக்கான மருந்துகளை வாங்க தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.280.20 கோடி நிதி வந்துள்ளது என முதல்வர் தெரிவித்தார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கருப்பு பூஞ்சை நோயில் மக்கள் அவதியுற்று வருகின்றனர். முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அரசு, சினிமா பிரபலங்கள் உட்பட பொதுமக்கள் பலரும் தங்கள் நிதிகளை தொடர்ந்து அளித்துவருகின்றனர். 


கொரோனா நிவாரண நிதியாக இதுவரை ரூ.280.20 கோடி நன்கொடையாக பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. ஏற்கெனவே சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளிலிருந்து ஆக்சிஜன் உருளைகள், கொரோனா சிகிச்சை மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு ரூ.41.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே பொது நிவாரண நிதியிலிருந்து கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்துவாங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் ரூ.25 கோடி நிதி மூலம் கருப்பு பூஞ்சை நோய்க்கு தேவையான மருந்துகள் வாங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 



Tags : First Public Relief Fund , Black fungus, drugs, Rs 25 crore fund, CM
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...