×

27 பேருக்கு கொரோனா அதிமுக மாஜி எம்எல்ஏ ஆயில் மில்லுக்கு சீல்

காங்கயம்:  திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நடராஜூக்கு சொந்தமான தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் மில்லில் 280 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஊரடங்கை மீறி செயல்பட்ட இந்த மில்லில் தொழிலாளர்கள் 15 பேருக்கு கடந்த 12 நாளுக்கு முன் கொரோனா தொற்று உறுதியானது. தொடர்ந்து, ஆயில் மில் இயங்கி வந்தது. இந்நிலையில், கடந்த 3 நாளுக்கு முன்பு அங்கு மீண்டும் 9 தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காங்கயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து ஊரடங்கை மீறி செயல்பட்ட மில்லுக்கு தாசில்தார் சிவகாமி சீல் வைத்தார்.

Tags : Corona AIADMK MLA , Former Corona AIADMK MLA seals oil mill for 27 people
× RELATED சேலம் சூரமங்கலத்தில் அதிமுக சார்பில்...