சென்னை: தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. செங்கல்பட்டு எஸ்.பி.யாக விஜயகுமார், காஞ்சிபுரம் எஸ்.பி.யாக சுதாகர், திருப்பத்தூர் எஸ்.பி.யாக சிபி சக்கரவர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் எஸ்.பி.யாக சரோஜ் குமார் தாகூர், தர்மபுரி எஸ்.பியாக கலைச்செல்வன், கிருஷ்ணகிரி எஸ்.பியாக சாய் சரண் தேஜஸ்வி, மதுரை எஸ்.பியாக பாஸ்கரன், விருதுநகர் எஸ்.பியாக மனோகர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.