சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் ஓ.பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துள்ளார். அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் நேற்று ஈபிஎஸ் தனியாக ஆலோசனை நடத்திய நிலையில் சந்தித்துள்ளார். தனக்கும், ஓபிஎஸ்க்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை என கூறிய நிலையில் சந்திப்பு நடந்துள்ளது. சகோதரர் மறைவுக்கு துக்கம் விசாரிக்க ஓபிஎஸ்சை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.