சென்னை: தெரு விலங்குகளுக்கு உணவு அளிக்க தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என சென்னைக்கு உயர் நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆளுநர் அளித்த ரூ.10 லட்சம் நிதி, தெரு விலங்குகளின் ஆரம்பகட்ட உணவுக்கு உதவி புரிந்துள்ளது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவு தரக்கோரி சிவா என்பவர் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜீ அமர்வு விசாரித்தது