×

சிறுமியை திருமணம் செய்த விவகாரம் போக்சோவில் போலீஸ்காரர் கைது

சென்னை: மதுரை திருமங்கலத்தை சேர்ந்த கருப்பையா மகன் பழனிகுமார் (27). பட்டதாரியான இவர் கடந்த 2016ம் ஆண்டு காவல் துறையில் காவலராக தேர்வு செய்யப்பட்டு, மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் ஆய்வாளரின் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். மாதவரம் காவலர் குடியிருப்பில் தங்கியிருந்த இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி, மதுரையில் உள்ள உறவினர் மகளான 17 வயது சிறுமியுடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

அதன்பின்னர் மனைவியை அழைத்துக்கொண்டு மாதவரம் காவலர் குடியிருப்பில் குடித்தனம் நடத்தி வந்தார். இந்நிலையில், 17 வயது சிறுமியை இவர் திருமணம் செய்தது தொடர்பாக மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதிக்கு புகார் வந்தது. இதையடுத்து அவர், புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பழனிகுமார் மீது புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணகி வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற் கொண்டார். அதில், 17 வயது சிறுமியை பழனிகுமார் திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மைனர் பெண்ணை திருமணம் செய்ததாக பழனிகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Bokso , Policeman arrested in Bokso for marrying a girl
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த...