சென்னை: சென்னையில் கூடுதலாக 7 மருத்துவமனையில் தடையில்லா மின்சாரம் வழங்க இரு மின்வழித்தட வசதி ஏற்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். ஸ்டான்லியில் உள்ள கொரோனா தடுப்பூசி மையம், கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட், எழும்பூர் குழந்தைகள் னால மருத்துவமனை, பெரியார் நகர் கொளத்தூர் அரசாங்க மருத்துவமனை ஆகியவற்றில் இரு மின்வழித்தட வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.