டெல்லி: பாஜக எம்.பி. கவுதம் கம்பீரின் தொண்டு நிறுவனம் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு ஆணையர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். கம்பீரின் தொண்டு நிறுவனம் சட்டவிரோதமாக ஃபாபிஃப்ளூ மருந்தை கையிருப்பு வைத்ததுடன் கொரோனா நோயாளிகளுக்கும் கொடுத்துள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.