ராமநாதபுரம்: தகுதியற்ற தலைமையால் அதிமுக அழியும் என்று ராமநாதபுரம் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் சோமாத்தூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கட்டிக்காத்த அதிமுகவை, தகுதி இல்லாத இரட்டை தலைமையின் கீழ் கொண்டு சென்று, எதிர்க்கட்சியாக மாற்றி விட்டனர். தகுதியற்றவர்கள் அமைச்சர்களாக இருந்தனர். தொண்டர்களை அரவணைத்து செல்ல முடியாதவர்கள், கட்சியில் மாவட்ட செயலாளர்களாக உள்ளனர். ஒன்றிய செயலாளர்கள் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர். துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் போன்றோர் இந்த இயக்கத்தை அழிக்க நினைக்கின்றனர். இவர்களால் அதிமுக அழியும். தற்போதுள்ள நிலையில் சசிகலா தலைமையேற்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.