×

கலைஞரின் வழிநின்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய சகாப்தம் படைக்க வேண்டும்: காதர் மொகிதீன் வாழ்த்து

சென்னை :இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ் நெறியின் பெட்டகமாக வாழ்ந்து, தமிழ் இனத்திற்கு தனது உணர்வாலும், உள்ளத்தாலும், பகுத்தறிவாலும், கரையில்லா அவரின் பட்டறிவாலும் காலமெல்லாம் பணியாற்றியிருக்கிறார். அவரின் பிறந்த நாளில் கலைஞர் ஆற்றிய தொண்டுகளும், அவரின் வரலாற்றுச் சாதனை பட்டியலும் நம் அனைவரின் வாழ்வுக்கு தூண்டுகோலாகவும், ஊன்றுகோலாகவும் என்றும் திகழும். கலைஞரின் வழிநின்று தமிழகத்திற்கு நல்ஆட்சியை ஊரும் உலகமும் மெச்சும் அளவிற்கு வழங்கிவரும் அவரின் மைந்தர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய சகாப்தம் படைத்திட எல்லோரும் வாழ்த்துவோம்.

தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு அதிகார மையத்தில் பணியாற்றும் சுமார் 6 ஆயிரம் தலைமை செயலக பணியாளர்கள் சார்பிலும், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் உள்ளிட்ட சுமார் 18 லட்சம் அரசு பணியாளர் குடும்பங்கள் சார்பிலும், தென்னகத்தில் உதித்த, பகுத்தறிவு வழிவந்த ஓய்வு அறியா உதயசூரியன் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 98வது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கொள்வதில் தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறது.

Tags : Stalin ,Kader Moketin , The Chief Minister should create a new era for MK Stalin through the artist: Greetings from Khader Mohiuddin
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...