×

வேலைக்காகவும், மேற்படிப்பிற்காகவும் வெளிநாடு செல்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கடிதம்: வேலைவாய்ப்புக்காகவும் கல்வி மேற்படிப்புக்காகவும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். தங்களின் தலைமையிலான அரசு சிறப்பான முறையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்திய 18 முதல் 45 வரையிலான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்துபவர்களில் வெளிநாடு வேலைவாய்ப்பிற்காகவும், உயர் கல்விக்காகவும் செல்வோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களின் தடுப்பூசி சான்றிதழில் சம்பந்தப்பட்ட நபர்களின் பாஸ்போர்ட் எண்ணை பதிவு செய்ய கேட்டுக் கொள்கிறோம்.

இதுபோன்ற நடைமுறைகள் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எனவே தமிழக அரசு வேலைவாய்ப்பிற்கு மற்றும் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Tags : Jawaharlal Nehru , Vaccination on priority basis for those going abroad for work and higher studies: Jawaharlal Nehru
× RELATED மக்களை மனதளவில் மாற்ற செய்யும் உத்தி...