மதுரை: குமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திருத்தொண்டர்கள் சபை நிர்வாகி ராதாகிருஷ்ணன் முறையீடு செய்துள்ளார். தமிழக கோயில்களில் தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.