×

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் மேலும் 1.32 லட்சம் பேர் பாதிப்பு, 3,207 பேர் உயிரிழப்பு, 2,31,456 பேர் டிஸ்சார்ஜ்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,207 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:


* புதிதாக 1,32,788 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை  2,83,07,832 ஆக உயர்ந்தது.

* புதிதாக 3,207  பேர் உயிரிழந்துள்ளனர்.

* இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,35,102  ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,31,456 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,61,79,085 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 17,93,645 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இதன் மூலம், நாட்டின் இதுவரை 21,85,46,667 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.



Tags : India , India, Corona, 1.32 lakh people affected
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...