பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 57 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர் மனோகர் (60), கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டவர், அங்கு நேற்று உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே 2 பேர் இறந்துள்ளனர். இவரையும் சேர்த்து பலி 3 ஆக உயர்ந்தது.