×

தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை: ஐகோர்ட்டில் பொதுநல மனுதாக்கல்

சென்னை: சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.ஐ.நாதன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கொரோனா இரண்டாவது அலை பரவலால் அப்பாவிகள் பலர் உயிரிழந்து வருகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி படுக்கைகளுக்கும், சாதாரண படுக்கைகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் ஒருநாளுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றன. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் குணமடைந்து வீடு திரும்பும் வரை மற்றொருவர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். ரெம்டெசிவிர் மருந்தை அரசு இலவசமாக வழங்குவதுடன், தற்போதைய அவசர நிலையை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் அரசு தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கொரோனா பாதித்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது….

The post தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை: ஐகோர்ட்டில் பொதுநல மனுதாக்கல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,GI Nathan ,second wave ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...