×

பெரம்பலூர் எஸ்பி, கணவர் 2 மகன்களுக்கு கொரோனா

பெரம்பலூர்: பெரம்பலூர் எஸ்.பி, கணவர் மற்றும் 2 மகன்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி.யாக இருப்பவர் நிஷா பார்த்திபன் (35). இவரது கணவர் பார்த்திபன் (39). ஐஏஎஸ் அதிகாரியான இவர், அருணாசல பிரதேசத்தில் பணிபுரிகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.  கடந்த ஒரு வாரத்துக்கு முன் பார்த்திபன் பெரம்பலூர் வந்தார். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இருமல் இருந்தது. இதனால் அவர்களும், 2 மகன்களும் நேற்றுமுன்தினம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதன் முடிவு நேற்று காலை வந்தது. இதில் 4 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து 4 பேரும் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Perramulur SP ,Corona , Perambalur SP, Corona to husband 2 sons
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...