×

முதல்வர் அலுவலக சிறப்பு தனி உதவியாளர் உட்பட 7 செயற்பொறியாளர்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: முதல்வர் அலுவலக சிறப்பு தனி அலுவலர் உட்பட 7 ெசயற்பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறையில் 7 செயற்பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்து செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு சுற்றுலாத்துறை மேம்பாட்டு கழக செயற்பொறியாளர் கங்காதரன் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக திட்ட கோட்டத்துக்கும், தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டு குழுமம் உறுப்பினர் செயலாளர் புனிதவேல் சென்னை நீர்வளத்துறை கொள்முதல் பிரிவு மற்றும் நிர்வாகத்துக்கும், முதல்வர் அலுவலகத்தின் கூடுதல் சிறப்பு தனி உதவியாளர் சேகர் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்துக்கும்

விருத்தாச்சலம் வெள்ளாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் மணிமோகன் திருச்சி ஆறுகளை பாதுகாத்தல் கோட்டத்துக்கும், திருச்சி ஆறுகளை பாதுகாத்தல் கோட்ட செயற்பொறியாளர் கண்ணன் சென்னை நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கும் (பொது),சென்னை எல்காட் (சிவில்) செயற்பொறியாளர் முருகன் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்ட செயற்பொறியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Transfer of 7 Engineers including Special Assistant to the Chief Minister's Office: Government of Tamil Nadu Order
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...