×

ஆஸ்திரியா உள்பட 8 நாடுகளுடன் வரும் 10ம் தேதி முதல் குறிப்பிட்ட அளவில் சர்வதேச விமான சேவையை இயக்க ரஷ்யா முடிவு

மாஸ்கோ: ஆஸ்திரியா உள்பட 8 நாடுகளுடன் வரும் 10ம் தேதி முதல் குறிப்பிட்ட அளவில் சர்வதேச விமான சேவையை மீண்டும் இயக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. ரஷ்ய அரசு வரும் 10ந்தேதி முதல் ஆஸ்திரியா, ஹங்கேரி, லெபனான், லக்சம்பர்க், மொரீசியஸ், மொராக்கோ, குரோசியா மற்றும் அல்பேனியா ஆகிய 8 நாடுகளுடனான சர்வதேச விமான சேவையை குறிப்பிட்ட அளவில் மீண்டும் இயக்குவது என முடிவு செய்துள்ளது. ஆஸ்திரியாவின் வியன்னா-மாஸ்கோ செல்லும் விமானம், ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட்-மாஸ்கோ செல்லும் விமானம், மொரீசியஸ் நாட்டின் போர்ட் லூயிஸ்-மாஸ்கோ செல்லும் விமானம், மொராக்கோ நாட்டின் ரபாத்-மாஸ்கோ செல்லும் விமானம், குரோசியா நாட்டின் ஜக்ரெப்-மாஸ்கோ செல்லும் விமானம் ஆகியவை வாரம் இரு முறை என்ற அடிப்படையில் இயக்கப்பட உள்ளன. 


லெபனான் நாட்டின் பெய்ரூட்-மாஸ்கோ செல்லும் விமானம், லக்சம்பர்க் நாட்டின் லக்சம்பர்க்-மாஸ்கோ செல்லும் விமானம் ஆகியவை வாரம் ஒரு முறை என்ற அடிப்படையில் இயக்கப்பட உள்ளன.  அல்பேனியா நாட்டின் திரானா-மாஸ்கோ செல்லும் சார்ட்டர்டு விமானங்களும் வாரம் ஒரு முறை என்ற அடிப்படையில் இயக்கப்பட உள்ளன. உலகம் முழுவதும் கொரோனா வைரசின் அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில், பல்வேறு நாடுகளும் சர்வதேச விமான போக்குவரத்து சேவையை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 



Tags : Russia ,Austria , Austria, with 8 countries, international airline, Russia
× RELATED ரஷ்யாவை புரட்டியெடுத்த கனமழை…அணை...