×

ஒரே நாளில் ஆயிரத்துக்கு மேலாக தீயாய் பரவும் கருப்பு பூஞ்சை நோய்; கர்நாடகாவில் 1250 பேர் பாதிப்பு: பொதுமக்கள் பீதி

கர்நாடகா: கர்நாடகாவில் ஒரே நாளில் 1,250 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு நகர பகுதி அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது.  இந்த பகுதியில் 521 பேர் நோய் பாதிப்புக்கு ஆளான நிலையில், 508 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 18 பேர் குணமடைந்துள்ள நிலையில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 8,800க்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் பாதிப்பு காணப்படுகிறது. 


ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழகம், ஒடிசா, குஜராத், பஞ்சாப், அரியானா, கர்நாடகா, பீகார் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இதனை தொற்று நோய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தொற்று நோயாக அறிவித்து உள்ளது. கொரோனா சிகிச்சைக்கு ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட கூடிய சாத்தியம் அதிகமுள்ளது என கூறப்படுகிறது.  நாட்டின் பல பகுதிகளில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு காணப்படுகிறது.



Tags : Karnataka , Millennial, black fungus, disease, in Karnataka, panic
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...