×

நடிகை அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு

சென்னை: நடிகை அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கருக்கலைப்பு செய்ய அடித்து துன்புறுத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை ஒருவர் கடந்த 28ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன்பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை, காயம் ஏற்படுத்துதல், ஏமாற்றுதல், பெண்ணின் அனுமதி இன்றி கருச்சிதைவுக்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மணிகண்டனை அழைத்து விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



Tags : minister ,Manikantan , ex minister, manikandan
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...