×

நாகர்கோவிலில் கரும்பூஞ்சை நோயால் ஒருவர் உயிரிழப்பு: மேலும் 5 பேருக்கு சிகிச்சை

நாகர்கோவில்: நாகர்கோவிலில் கரும்பூஞ்சை நோய்க்கு ஒருவர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மியூக்கர்மைசிஸ் எனப்படும் கரும்பூஞ்சை நோய் தமிழகத்தில் பரவலாகி வருகிறது. இதுவரை 400க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு தெரியவந்துள்ளது.

இந்த நோயை குணப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் 6 பேர் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்களில் சுரேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



Tags : Nagargov , black fungus
× RELATED நாகர்கோவிலில் திறன் மேம்பாட்டு கழக...