திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் 100 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.மேலும், 20 கார் ஆம்புலன்ஸ் வசதியும் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்துக்கு 23.50 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசிடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.