×

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் விவரங்களை பதிவு செய்ய இணையதளம்: ஆணையம் அறிவிப்பு

சென்னை:தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா நோய் தொற்றால் தங்களது பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அனைத்து மாவட்ட நிர்வாகங்களையும் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் பால் ஸ்வராஜ் இணையதளம் செயல்பாட்டில் உள்ளது. அதில் கொரோனாவுக்கு பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் உரிய விவரங்களை மாவட்ட நிர்வாகம்  பதிவேற்றம் செய்ய வேண்டும்  என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Corona , Website to register details of children who have lost their parents by Corona: Commission Notice
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...