×

கட்சிய சரி பண்ணிடலாம் தைரியமா இருங்க...தொண்டரிடம் சசிகலா பேச்சு வைரல்

சென்னை: கட்சிய எல்லாம் சரி பண்ணிடலாம் தைரியமாக இருங்க... என்று தொண்டர் ஒருவரிடம் சசிகலா பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சிறைவாசம் முடிந்து வந்ததும், தமிழகத்தில் அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துவிடுவார் என்றும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்றாலும், அரசியலில் முக்கிய நபராக மாறுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் தேர்தல் முடிந்த நிலையில் அதிமுக தோல்வியை தழுவியது. இதையடுத்து, சசிகலா தொடர்ந்து அமைதி காத்து வந்தார்.
 இந்நிலையில், அவர் தொண்டர் ஒருவரிடம் செல்போனில் பேசிய பேச்சு வைரலாகி வருகிறது. அதில் சசிகலா பேசிய உரையாடல் வருமாறு:
 தொண்டர்: அம்மா ரொம்ப சந்தோஷம் மா...
 சசிகலா: சரி நீங்க நல்லா இருக்கீங்களா...
 தொண்டர்: நல்லா இருக்கேம்மா.. அம்மா நீங்க பேசுறது பெரிய விஷயம் மா...
 சசிகலா: சரி... சரி.. வீட்டில் எல்லாம் நல்லா இருக்காங்களா..
 தொண்டர்: பக்கத்தில பெரிய பொண்ணு இருக்கு.. சின்ன பையன் இருக்காம் மா..
 சசிகலா: சரி.. ஒன்னும் கவலைப்படாதீங்க.. கட்சிய எல்லாம் சரி பண்ணிடலாம்... தைரியமா இருங்க எல்லாரும்..
 தொண்டர்: ரொம்ப சந்தோஷம் மா.. உங்களுக்காக உயிரையே கொடுப்போம் மா.. உங்க பின்னாடி தான் எப்பவும் இருப்போம்.
 சசிகலா: கொரோனா பிரச்னை ரொம்ப மோசமா இருக்கும்.. எல்லாரும் ஜாக்கிரதையா இருங்க. வீட்டிலேயும் எல்லாரும் ஜாக்கிரதையா இருங்க...
 தொண்டர்: ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நீங்க வரணுமா..
 சசிகலா: நிச்சயம் நான் வந்திருவேன்.
 இவ்வாறு அந்த உரையாடல் முடிகிறது.
  ‘விரைவில் கட்சிய சரி பண்ணிடலாம்’ என்று தொண்டர் ஒருவரிடம் சசிகலா பேசியிருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Sasicila , Dare to punish the party ... Sasikala's speech to the volunteer went viral
× RELATED சசிகலாவுடன் டிடிவி திடீர் சந்திப்பு:...