சென்னை: சென்னை, திருவள்ளூர் போல் மதுரை நகரில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது என்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். மதுரை புறநகரில் கொரோனா பரவல் சற்று அதிகமாக உள்ளது. மேலும் ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற நடைமுறை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை என் அவர் தெரிவித்துள்ளார்.