சென்னை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிட்டவர் ராணி ரஞ்சிதம். இவரது கணவர் வெள்ளத்துரை நெல்லை நகர குற்றப் பிரிவில் கூடுதல் எஸ்.பி.யாக பணியாற்றி வந்தார். ராணி ரஞ்சிதம், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானதும், வெள்ளத்துரையை சென்னை டி.ஜி.பி. அலுவலக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதேநேரத்தில் ராணிரஞ்சிதம் 4194 ஓட்டுக்களை பெற்று டெபாசிட் இழந்தார். இந்தநிலையில், வெள்ளத்துரை திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவணக்காப்பக கூடுதல் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை டி.ஜி.பி. திரிபாதி நேற்று பிறப்பித்துள்ளார்.